சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி பாரதியை மிரட்டும் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் வெண்பா சிறையில் இருந்து வெளியில் வந்து விட்டதை போல் காட்சிகள் வருகிறது. இதனால் சீரியல் அடுத்த கட்ட பரபரப்புக்கு செல்ல இருக்கிறது.
அடுத்தகட்ட திருப்பங்கள்:
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வரும் பாரதியும், கண்ணம்மாவும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் வருகிறது. இவர்கள் முட்டிக் கொள்ளும் காட்சிகள் ரசிக்கும் படியாக இருப்பதால் ரசிகர்களின் ஆதரவு தொடருக்கு பெருகி வருகிறது. வெண்பா சிறைக்கு சென்றிருப்பதால் கதையில் சற்று மாற்றத்தை கொண்டு வருவதற்காக இந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெண்பா அஞ்சலிக்கு தவறான மாத்திரைகளை கொடுத்துள்ளார் என்பதை அறிந்த பாரதி வெண்பா மீது கடும் கோவத்தில் இருக்கிறார். சிறையில் இருந்து பாரதிக்கு வெண்பா கால் செய்த போதும் கூட கடுமையாக திட்டி வைத்து விடுகிறார்.
சரவணன் உடல்நிலையை அறிந்து போட்டி வேண்டாம் என சொல்லும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
வெண்பாவின் சமையல்காரி சாந்தி பாரதியை வந்து நேரில் பார்த்த போதும், திட்டி அனுப்புகிறார். இதனால் பாரதி கண்ணம்மா பக்கம் சாய்ந்து விட்டதாக நினைத்து பாரதி மேல் வெண்பா கோவத்தில் இருக்கிறார். வெண்பாவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று முனியாண்டி கூடி வந்த வக்கீல் போலி ஆசாமி போல் இருக்கிறார். சாந்தியிடம் வந்து ஜாமீன் எடுக்க அதிகம் செலவாகும் என்றும் பொய் சொல்லி அடிக்கடி பணத்தை பணம் வாங்கி செல்கிறார். இது பற்றி வெண்பாவிடம் பேசும் போது சாந்தி சொல்லும் போது, அப்படி இதுவரை ஒரு வக்கீல் கூட தன்னை வந்து பார்க்க வில்லை என்று விடுகிறார். இருந்தாலும் எப்படியோ ஜாமீன் வாங்கி வெளியில் வந்து விடுகிறார்.
வெண்பா வெளியில் வந்த பிறகு, பாரதி வெண்பாவை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது, கண்ணம்மாவும் கூட இருக்கிறார். பாரதி நீ பண்ண தப்பிற்கு உன்னை எப்படி வெளியில் விட்டாங்க, உனக்கு யாரு ஜாமீன் தந்தது. நீ பண்ண அந்த தப்ப விட்டாலும், அஞ்சலிக்கு தப்பான மாத்திரையை கொடுத்திருக்க, உன்ன சும்மா விடமாட்டேன் என்று திட்டுகிறார். உடனே, வெண்பா இவ்ளோ நாள் பிரண்ட்ன்னு கூட இருந்த, உனக்கு துரோகம் பண்ண கண்ணம்மா கூட சேந்துகிட்டு என்னையே மிரட்டரியா என்று திட்டுகிறார். இதனால் அடுத்து வரும் காட்சிகள் பாரதி கண்ணம்மா தொடரில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.