‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவுக்கு ஷர்மிளா பார்த்த மாப்பிள்ளை இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக அவரது அம்மா ஷர்மிளா முடிவு செய்திருக்க, அந்த நபர் ஒருவேளை துர்காவாக இருக்கும் என சில யூகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாரதி கண்ணம்மா
சமீப காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதையில் புதிய திருப்பங்கள் பல அரங்கேறி கொண்டிருக்கிறது. இதுவரை கண்ணம்மா, பாரதி, சௌந்தர்யா என அனைவரையும் ஓடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வில்லி வெண்பாவுக்கு அம்மா ரூபத்தில் ஒரு சோதனை வந்திருக்கிறது அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைப்படி, கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே பாரதியை காதலித்து வரும் வெண்பா அவருடன் தோழியாக பழகி கொண்டிருக்கிறார். இடையில் பாரதி, ஹேமா என்ற பெண்ணை காதலிப்பது தெரிந்ததும் அவரை லாரி ஏற்றி கொலை செய்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து பாரதி மற்றும் வெண்பாவுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி விழ, திடீரென பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் திருமணம் ஆகிறது. என்னதான் பாரதி ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தாலும், அவரை அடைய வேண்டும் என்பதற்காக இல்லாத பொய்களை சொல்லி இருவரையும் 8 வருடங்களாக பிரித்து வைத்து விட்டார் வெண்பா. இப்படி ஒரு குடும்பத்திற்கு செய்யக்கூடாத அத்தனை தீமைகளையும் செய்து ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்த வெண்பா இப்போது அம்மா சர்மிளாவிடம் வசமாக மாட்டி இருக்கிறார். அதாவது, வெண்பாவின் அம்மா சர்மிளா, அவருக்கு திருமணம் செய்து வைக்க போவதாகவும், பாரதியிடம் இருந்து விலக வேண்டும் என எச்சரிக்கிறார்.
10ம், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இப்போது அம்மாவின் பிடியில் சிக்கிக் கொண்ட வெண்பா, வேறு வழியில்லாமல் அவர் காட்டும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லி இருக்கிறார். இப்படி இருக்க வெண்பாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் அந்த மாப்பிள்ளை யாராக இருக்கும், அவர் ஒருவேளை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த துர்காவாக இருக்குமா, இல்லை வருண் மாப்பிள்ளையாக வருவாரா என்று சில சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மறுபக்கத்தில், புதிதாக ஒருவர் அறிமுகமாகவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.