தீவிரவாதிகளின் பிடியில் சிக்கும் கண்ணம்மா, பதட்டத்தில் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் திடீர் திருப்பமாக கதையில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பான காட்சிகள் வர உள்ளது. இதனால் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பது உறுதியாகிறது.
பாரதி கண்ணம்மா:
ஹேமாவும், லக்ஷ்மியும் உண்மையாகவே சகோதரிகள் தான் என்பது பாரதிக்கு தெரிந்த பிறகு, ஹேமாவை லட்சுமியிடம் இருந்து பிரிக்க நினைக்கிறார். ஏனென்றால், லக்ஷ்மிக்கு தான் தான் அப்பா என்ற விஷயம் தெரிந்து விட்டது. அதேபோல், இந்த விஷயமும் ஹேமாவிற்கு லட்சுமி மூலம் தெரிந்து விடும் என்று நினைக்கிறார். இதனால் இருவரும் ஒரே பள்ளியில் படிப்பது தானே பிரச்சனை என்று, ஹேமாவை வேறு பள்ளியில் சேர்க்க நினைக்கிறார். குழந்தைகள் இருவரும் எவ்வளவோ அழுதும் கூட பாரதி இந்த வொஷயத்தில் பிடி வாதமாக இருந்து விட்டார்.
ஒரு வழியாக, பள்ளியில் ஹேமாவின் டிசியை வாங்கி விடுகிறார். ஆனால், அதன்பிறகு குழந்தைகள் இருவரும் அழுவதை பாரதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.இதனால் டிசியை கிழித்து விடுகிறார். அதன்பிறகு, கண்ணம்மா பாரதியிடம் நீங்கள் இதை தான் செய்வீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும் என்று கூறுகிறார். பிறகு, வீட்டிற்கு வந்து சௌந்தர்யாவிடம் அனைத்து விஷயங்களையும் கூறுகிறார் கண்ணம்மா. இதை கேட்டு சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று சௌந்தர்யா கூறுகிறார்.
TNPSC GROUP I தேர்வர்கள் கவனத்திற்கு!!! – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!!!
பின்னர், பாரதியின் மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் அட்மிட் ஆகிறார். இவரை கொள்வதற்காக தீவிரவாதிகள் சதி வேலை செய்கின்றனர். மருத்துவமனையில், பராமரிப்பு வேலைகளை பார்க்க வந்தவர்கள் போல் கண்ணம்மா பேரை சொல்லி நுழைகின்றனர். கண்ணம்மா வந்த பிறகு இந்த விஷயத்தை மருத்துவமனையில் சொல்லுகின்றனர். உடனே, கண்ணம்மா நான் யாரையும் வர சொல்லவில்லையே என்று சொல்லி அவர்களை பார்க்க செல்கிறார். அங்கு தீவிரவாதிகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடையும் சமயத்தில், தீவிரவாதிகள் கண்ணம்மாவை கட்டி வைத்து விடுகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
இனி சமைஞ்சா என்ன
சமையாமல் போனாதான் என்ன.
இந்த சீரியலை மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள்.
பேசாமல் கதையை முடித்துவிட்டு வேறு சீரியல் தொடங்கலாம்.