சிறையில் இருந்து விடுதலையாகும் துர்கா, அதிர்ச்சியில் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, பாரதி கண்ணம்மா சீரியல். தற்போது இதில் யாரும் எதிர்பாராத விதமாக வெண்பாவை ஒரு தலையாக காதலித்து வரும் துர்கா இனி வரும் எபிசோடுகளில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியலின் ரீமேக் ஆகும். தற்போது முக்கிய கட்டடமாக இந்த சீரியலில் கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமி தனது தந்தை தான் பாரதி என்பதை கண்டுபிடித்து விடுகிறார். இதனால் அவரது செய்கைகளில் பல மாறுதல்கள் இருக்கிறது. இதனை பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் உணர்ந்து கொண்டாலும் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
போலீசில் சிக்கிய பாக்கியா, ராதிகா – யாரை காப்பாற்ற போகிறார் கோபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இது ஒரு புறம் இருக்க, தற்போது வரை பாரதி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் வெண்பாவின் அம்மா என்று ஷர்மிளா வருகிறார். அவர் வந்ததும் அதிரடியாக பாரதியிடம் வெண்பா திருமணம் பற்றி பேசுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் பாரதி வெண்பாவிடம் இது குறித்து கேட்கையில் வெண்பா மழுப்பி விடுகிறார். ஷர்மிளா வந்த விஷயத்தினை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் பாரதி பார்த்து கொள்ளுகிறார். கடந்த வாரம் பாரதிக்கு சிறந்த மனிதநேயத்திற்கான விருது கொடுத்து கவரவிக்கின்றனர். இதனால் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இது போன்ற காட்சிகளால் மீண்டும் சீரியலில் பல ட்விஸ்ட்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக யாருமே எதிர்பாராத விதமாக வெண்பாவை ஒரு தலையாக காதலித்து வரும் துர்கா சிறையில் இருந்து வந்து விடுகிறார். வந்ததும் வெண்பாவை தான் காண வருகிறார். இதனை எதிர்பார்க்காத வெண்பா பயப்படுகிறார். இனி வரும் நாட்களில் இது போன்ற காட்சிகள் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.