வெண்பாவை சீண்டும் கண்ணம்மா, மகிழ்ச்சியில் பாரதி குடும்பத்தினர் – வெளியான ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
“பாரதி கண்ணம்மா” ப்ரோமோ
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா” தெலுங்கு சீரியலான “கார்த்திகை தீபம்” என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியல். எதார்த்தமான கதைக்களத்துடன் இந்த சீரியல் அமைக்கப்பட்டு இருப்பதால் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலில் தற்போது அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அஞ்சலி அனைவர் முன்பாகவும் பாரதிக்கு வெண்பாவுடன் திருமணம் நடக்கவில்லை என்று மறைமுகமாக கூறி விடுகிறார்.
இந்த செய்தியினை அறிந்து கண்ணம்மா குழப்பத்துடன் இருக்கிறார். அதே போல கண்ணம்மா தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்பதனை அறிந்து கொள்கிறார். அது குறித்து சௌந்தர்யாவிடம் கேள்விகளையும் கேட்கிறார். இது ஒரு புறம் இருக்க, தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கண்ணம்மா, வெண்பா பாரதியை திருமணம் செய்து கொண்டதை போல் ஏமாற்றியதற்காக அவரை சீண்டி பார்க்கிறார்.
எதிர்பாராத விதமாக கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சாப்பிட அமர்கின்றனர். பின்னர், பாரதி எழுந்து செல்ல நினைக்கிறார். ஆனால், அனைவரும் அமர்ந்து விட்டதால் வேறு வழி இல்லாமல் கண்ணம்மா பக்கத்தில் அமர்ந்து கொள்கிறார். கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்ற வேண்டும் என்றே லட்சுமிக்கு ஊட்டி விடும் சாக்கில் பாரதியை இடிக்கிறார். இதனை பார்க்கும் வெண்பாவிற்கு கோபம் வருகிறது. ஆனால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் வெண்பா இருப்பதால் அமைதியாக இருக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.