‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் தன்னம்பிக்கை நிறைந்த பதிவு – ரசிகர்கள் பாராட்டு!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பெரும் புகழை அடைந்த ரோஷினி, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஒரு புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் தன்னம்பிக்கை நிறைந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
ரோஷினியின் பதிவு:
மாடலிங் துறையில் தனது தனித்திறமையின் மூலமும், தனி அடையாளத்தின் மூலமும் தன் மீதான கவனத்தை அதிகம் ஈர்த்தவர் ரோஷினி. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் கருத்த நிறமுடைய பெண்ணை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கதை தான் பாரதி கண்ணம்மா. இந்த கதைக்கு பொருத்தமானவராக இருந்த ரோஷினி சிறப்பான நடிப்பை கண்ணம்மாவாக வெளிப்படுத்தி இருப்பார். கதையில் ஆரம்ப கட்டத்தில் மிகவும் வெகுளியான பெண்ணாக, வெள்ளந்தியாக நடித்திருந்தார். அதன் பின்னர், பாரதியை திருமணம் செய்த பிறகு காதல் மனைவியாக மிகவும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘வேலைக்காரன்’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதியாக நடித்த அருண் மற்றும் ரோஷினிக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அதிக ரசிகர்களை பெற்றது. அதே பாரதி கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட தொடங்கிய பிறகு, புயலாக மாறிய கண்ணம்மா தனது குழந்தையை தானே நல்ல முறையில் வளர்க்க தொடங்குகிறார். இப்படி கதையில் ஒவ்வொரு மாற்றத்திலும் அந்தந்த சமயத்திற்கு தேவையான நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார், நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இதனால் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் சேர தொடங்கினார்கள். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர் வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக தான் வெளியேறியுள்ளதாக கூறி இருந்தாலும், வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் – கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!
இதனால் ரோஷினியின் சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து அதிக கேள்விகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில், ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு “விஷயங்கள் எளிதாக இருக்கும்போது நாம் வளர மாட்டோம், அதிக சவால்களை எதிர்கொள்ளும் போது தான் வளர்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளது குறித்து பலரும் பல விதமாக பேசி வரும் நிலையில், ரோஷினி தன்னம்பிக்கை நிறைந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரோஷியின் தன்னம்பிக்கை குறித்து ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.