கண்ணம்மா மீது பழி சுமத்தி மருத்துவமனையை விட்டு விரட்டும் கணேசன் – நிம்மதியில் பாரதி! ப்ரோமோ ரிலீஸ்!
மீண்டும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில் கண்ணம்மாவை பாரதி விவாகரத்து பெற்று விடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மா மருத்துவமனையை விட்டுச் செல்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவை பாரதி விவாகரத்து செய்து விடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு பாரதி வழக்கு தொடர்ந்திருந்த போது நீதிபதிகள் ஆறு மாதம் கண்ணம்மாவுடன் ஒரே வீட்டில் வசித்தால் மட்டுமே விவகாரத்து கொடுக்க முடியும் என கூறியிருந்தார். பின்னர், ஒரு சில நாட்கள் மட்டும் கண்ணம்மாவுடன் இருந்துவிட்டு பழைய படி சண்டை போட்டு தனது வீட்டிற்கே பாரதி கிளம்பிவிட்டார். தற்போது மீண்டும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், வெண்பாவிற்கு ஜோடியாக ரோஹித் என்னும் புதிய கதாபாத்திரம் சீரியலில் என்ட்ரியாகி உள்ளது. ஆனாலும், வெண்பா பாரதியை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென நினைக்கிறார். இந்நிலையில் வெண்பா மற்றும் தனது குடும்பத்தினர் முன்னிலையில் எனக்கு யாரையும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஐடியா சுத்தமாக கிடையாது எனக் கூறிவிட்டு கிளம்புகிறார். இதனால் கடுப்பான வெண்பா எப்படியாவது பாரதியை திருமணம் செய்தே தீரவேண்டும் என அடுத்த திட்டத்திற்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார். இதன் பின்பு வெண்பாவை பாரதி திருமணம் செய்து கொள்ள அடுத்து என்ன திட்டம் போட போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – கடந்த ஆண்டுகளை விட தேர்ச்சி விகிதம் குறைவு!
இதற்கு நடுவே இறந்த அம்மாவை ஏன் திரும்ப விவாகரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஹேமா அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஹேமாவுக்காக கண்ணம்மாவை பாரதி விவாகரத்து செய்யாமல் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் அனைத்து குழப்பங்களும் தீர்ந்து விடும். ஆனால், அதை மட்டும் செய்யாமல் தேவையில்லாமல் பல திருப்பங்களை சீரியலில் செய்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் எரிச்சலடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கண்ணம்மா மீது கணேசன் தேவையில்லாமல் ஒரு குற்றத்தை சுமத்தி மருத்துவமனையில் இருந்து விரட்டி விடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. எப்படியோ கண்ணம்மா நம்மை விட்டு விலகி விட்டால் போதுமென பாரதி சந்தோஷப்படுகிறார்.