‘வெண்பா இஸ் பேக்’ பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின் மிரட்டலான ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி நேற்று வந்திருக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் கொடுமைகளை தாங்க முடியாமல் ரசிகர்களே வெண்பாவை அதிகம் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த சம்பவம் நடந்துள்ளது.
வெண்பாவின் என்ட்ரி:
தமிழகத்தில் தற்போதைய நிலையில் சின்னத்திரையின் மெகா வில்லியாக வலம் வருபவர் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரீனா. இவரது வில்லத்தனம் பார்க்கும் அனைவரையும் மிரள வைக்கும் அளவிற்கு இருக்கும். தற்போது அவரது ரீஎன்ட்ரி தான் சின்னத்திரையில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஃபரீனா தனது பிரசவத்திற்காக ஓய்வில் சென்றிருந்தார். பிரசவம் முடிந்த சில நாட்களிலேயே தான் பணிக்கு திரும்ப தயார் நிலையில் இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தன்னால் முடியும் என்றால் அனைத்து பெண்களும் செய்ய முடியும் என்றும், பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்தை பதிவிட்டார்.
ஃபரீனாவின் வார்த்தைகள் பல பெண்களுக்கும் ஊக்கமாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. ஃபரீனாவின் விடுமுறை காலத்தை சமாளிப்பதற்காக சீரியலில் பாரதியும், வெண்பாவும் ஒரே வீட்டில் இருப்பது போலவும், அவர்களுக்கு இடையில் பல கற்பனைகளும், கனவு காட்சிகளும் வருவது போல் கதையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இதனால் வெண்பா எப்போது சீரியலில் மீண்டும் வருவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். சீரியலில் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு முன்பாகவே ஃபரீனா சேனலில் நடந்த கிறிஸ்துமஸ் விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
OTT ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் களமிறங்கும் டாப் போட்டியாளர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
கதையிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்க ஏற்பாடு செய்வதை போல் காட்சிகள் வந்தது. ஃபரீனா ஷூட்டிங்கிற்கு திரும்பி இருக்கும் நிலையில், அவரின் காட்சிகள் நேற்று முதல் சீரியலில் வர தொடங்கி இருக்கிறது. சிறையில் இருந்து கோவத்துடன் வரும் ஃபரீனா பாரதி மற்றும் கண்ணம்மாவை நிம்மதியா இருக்க விட மாட்டேன் என்று சபதத்துடன் வருவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஃபரீனா ‘வெண்பா இஸ் பேக்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வெண்பாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.