குழந்தைக்கு தாயான ‘பாரதி கண்ணம்மா’ பரினா படக்குழுவினருக்கு வேண்டுகோள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மிகவும் புகழை அடைந்த நடிகை ஃபரீனா, பிரசவ கால ஓய்வில் இருந்து திரும்பி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள தொடங்கியிருக்கும் நிலையில் படக்குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
ஃபரீனாவின் வேண்டுகோள்:
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையின் பயங்கரமான வில்லியாக மாறியவர் நடிகை ஃபரீனா. இவர் முன்னதாக பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அப்போது மக்கள் மத்தியில் அறியப்பட்டாலும், பாரதி கண்ணம்மா வெண்பாவாக அவர் அடைந்த வெற்றியின் உயரம் மிகவும் பெரியது. இதற்காக பல்வேறு விமர்சனங்களையும் அவர் கடந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் வெண்பாவாக அவர் செய்து வரும் அட்டூழியங்கள் அனைத்தும் பார்க்கும் ரசிகர்களையும் கூட கோவப்பட வைக்கும் அளவுக்கு இருக்கும்.
ஃபரீனா தனது திருமண வாழ்க்கையின் 4 வருட கனவாக சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். திரை வாழ்க்கையை போலவே ஃபரீனாவின் திருமண வாழ்க்கையும் அதிக மேடு பள்ளங்களை சந்தித்து, தற்போது இருவரும் மகிழ்ச்சியான தம்பதியினராக உள்ளனர். தனது கர்ப்ப காலத்தில் ஓய்வு என்ற பேச்சுக்கு இடமின்றி, பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்து கொண்டிருந்தார். இதனால் பலரின் பாராட்டுகளையும் பெற்றார். ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்து நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாக ஃபரீனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தான் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கிற்கு மீண்டும் பணிக்கு வந்துள்ளதாக ஃபரீனா அறிவித்திருந்தார். இதனால் வெண்பாவின் அட்டகாசங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க தொடங்கி விட்டனர். தற்போது விஜய் டிவியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு கொண்டாட்டம் நிகழ்ச்சி படப்பிடிப்பில் ஃபரீனா கலந்து கொண்டுள்ளார். அப்போது, விஜே அர்ச்சனா ஃபரீனாவை பார்த்து, ஒரு ஒன்றரை மாதங்களுக்கு முன்னாள் வரை புள்ளத்தாச்சி பொண்ணு அதுனால வேகமா வீட்டுக்கு விட்ருங்கன்னு கேப்பா.. ஆன இப்போ என்ன சொல்ற பாருங்கன்னு கேட்கும் போது, ஃபரீனா தான் ஒரு பச்சஒடம்பு காரி அதுனாலே சீக்கிரமா வீட்டுக்கு அனுப்பிருங்கன்னு சொல்ராங்க.
சந்தியாவை காப்பாற்றும் சரவணன், போட்டியில் கலந்து கொள்ள சொல்லும் சிவகாமி – “ராஜா ராணி 2” எபிசோட்!
இதற்கு அர்ச்சனா சில விஷயங்கள் என்ன ஆனாலும் மாறுறது இல்லன்னு சொல்லிருக்காங்க. இதனை பார்த்த ரசிகர்கள் பிரசவத்திற்கு பிறகு இவ்வளவு சீக்கிரம் சீரியல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இது போன்ற நிகழ்ச்சிகளிலும் ஃபரீனா கலந்து கொள்வதை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர்.