வில்லி வெண்பாவுடன் மீண்டும் இணைந்த பாரதி அருண் – வைரல் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அருண் மற்றும் ஃபரீனா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு:
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ஜெயிலில் இருந்து வெளியில் வந்துள்ளார். இவரது காட்சிகள் தற்போது சீரியலில் மீண்டும் வரத்தொடங்கியுள்ளது. வெண்பாவின் கதாபாத்திரம் பல நாட்களாக சீரியலில் தொடர்ந்து வராததால் அவரது ரசிகர்கள் அதிகம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி வந்துள்ளதால் வெண்பாவின் வில்லத்தனம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெண்பாவும் சிறையில் இருந்து வெளியில் வந்த உடனேயே கண்ணம்மாவையும் பாரதியையும் பிரிக்க வேண்டியது தான் முதல் வேலை என்று கூறி வருகிறார்.
‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது கண்ணம்மா மற்றும் பாரதியின் 10ம் ஆண்டு திருமண நாள் விழா வர இருக்கிறது. அதே நாளில் வீட்டில் பூஜையும், அஞ்சலியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவும் நடக்க உள்ளது. இதற்கான காட்சிகள் பரபரப்பாக இருக்கும் என்றும், கண்ணம்மாவை ஒதுக்குவதற்காக பாரதி செய்யும் காரியங்களும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழா எதிலும் கலந்து கொள்வதில் பாரதி ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். ஆனால் அவரை சௌந்தர்யா தான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார்.
‘ராஜா ராணி 2’ சீரியல் இயக்குனருக்கு பதிலடி கொடுத்த ஆல்யாவின் கணவர் – நெட்டிசன்கள் கருத்து!
இந்நிலையில், இனி வரும் நாட்களில் வெண்பா எப்படியும் பாரதியிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் பழையபடி ஒன்றாக சேருவதற்கான முயற்சிகளை எடுத்து வருவார். இதனால் இவர்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து கண்ணம்மாவை வெறுப்பேற்ற இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெண்பாவுடன் பாரதி சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இது எல்லாம் ஒரு சீரியல் இதுக்கு இவ்ளோ பந்தாவா.