பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகவுள்ள பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதிக்கு கண்ணம்மாவை பற்றிய உண்மைகள் தெரியவருமா, இருவரும் சேருவார்களா என எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதி எப்போது தான் DNA டெஸ்ட் எடுத்து உண்மையை தெரிந்துகொண்டு கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவை அனைவருமே வெறுத்து ஒதுக்கிய போது பாரதி தான் கண்ணம்மாவை விரும்பி திருமணம் செய்துகொண்டார்.
விக்கியின் கொடுமையால் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் பார்வதி – சந்தியா காப்பாற்றுவாரா? ப்ரோமோ ரிலீஸ்!
பாரதியின் குடும்பத்தில் உள்ள அனைவருமே கண்ணம்மாவை வெறுத்து ஒதுக்கினர். அப்போது பாரதி மட்டுமே கண்ணம்மாவிற்கு துணையாக இருந்தார். ஆனால், பாரதிக்கு நாளடைவில் சந்தேகம் என்கிற ஒரு நோய் வந்து தொற்றி கொண்டதால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்கிறார். ஒரு வேளை உண்மையாகவே கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லையோ என பாரதி நினைக்கும் போதெல்லாம் வெண்பா பாரதியின் மனதை மாற்றி கண்ணம்மாவை வெறுக்க வைக்கிறார். எப்படியாவது பாரதியின் மனதை மாற்றி பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வெண்பா பிளான் போட்டு கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது புதிதாக வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்கிற புதிய கதாபாத்திரம் சீரியலில் எண்ட்ரியாகியுள்ளது. ஷர்மிளா பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்துவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். என்ன தான் கண்ணம்மாவை விட்டு பாரதி விலக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்கவே நினைக்கிறது. இப்படி, பாரதி கண்ணம்மா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்