விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருணுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் பிரசாத்துக்கு சின்னத்திரை நடிகையுடன் சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை அவர் இதுவரை உறுதி செய்யவில்லை.
வைரலாகும் தகவல்:
விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் டாக்டர் பாரதியாக நடிப்பவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. சின்னத்திரையின் எக்ஸ்பிரஷன் கிங்காக அருண் கொண்டாடப்படுகிறார். இவர் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். மேலும் மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராகவும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் அருணும், ராஜா ராணி சிரியல் வில்லி அர்ச்சனாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வைரலாகி வருகிறது.
கதிர் வீட்டுக்கு வரும் தனம் & ஜீவா – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் விருது வாங்க மேடை ஏறிய அர்ச்சனாவை ஈரோடு மகேஷ், ஆங்கர் அர்ச்சனா இருவரும் டாக்டர் டாக்டர் என்று சொல்லி பயங்கரமாக கலாய்த்தனர். அதை பார்த்து அருண் பிரசாத் வெட்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலானது. அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் தங்கை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அருண் பிரசாத்தும் இடம் பெற்று இருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் லீக் ஆனது. இந்த நிகழ்வுகளை வைத்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது அர்ச்சனாவுக்கும் அருண் பிரசாத்துக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூடிய விரைவில் கல்யாணம் நடக்கவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும் சீரியலில் சைலண்ட் ஆக இருக்கும் அருண்பிரசாத்திற்க்கும், ராஜா ராணி2 சீரியலில் அடாவடி செய்யும் அர்ச்சனாவிற்கும் எப்படி செட் ஆகும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த நிச்சயதார்த்த தகவலுக்கு அர்ச்சனா அல்லது அருண் பதில் அளித்தால் மட்டும் ரசிகர்களுக்கு இது பற்றிய உண்மை தெரிய வரும்.