“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து நான் விலகுகிறேனா? அருண் பிரசாத் சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலின் கதாநாயகன் நடிகர் அருண் பிரசாத் தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து அவர் வெளிப்படையாக விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றி சீரியல் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். அதுவே கதைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி வெண்பா கண்ணம்மா என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் கதைக்கு மையமாக இருக்கின்றனர். பாரதியாக தொடக்கம் முதல் நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன்னதாக மேயாத மான் படத்தில் நடித்தவர்.
தனது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியா – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் பாரதியாக நடிக்க மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மனதில் டாக்டர் பாரதி என்ற அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அது பற்றி அவரே விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். முதலில் சீரியலில் இருந்து விலக போகிறீர்களா என்ற கேள்விக்கு சிரித்த அவர் அதன் பின் நான் ஏன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து விலக போகிறேன் என கேட்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
படங்களை விட சீரியல் மூலமாக தான் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக முடிகிறது. அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்த வேண்டும் என சொன்ன அவர், நான் காலேஜ் படிப்பது போல சீரியலில் நடித்து வருகிறேன். 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது இன்னும் 2 ஆண்டுகள் என்னுடைய முழு திறமையையும் காட்டுவேன் என சொல்லி இருக்கிறார். இப்போது படப்பிடிப்பில் இருக்கீங்களா என கேட்டதற்கு நான் நாளைக்கு படப்பிடிப்பிற்கு போவேன் வந்து பாருங்கள் என விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.