சீரியலை விட்டு திடீரென விலகிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா – ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் என்ன தெரியுமா?
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அபி டெய்லர்” சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரீனா சீரியலில் இருந்து விலகி இருப்பதாகவும், அவருக்கு பதிலாக ராஜபார்வை சீரியல் நடிகை கீர்த்தி நடிக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை பரீனா அசாத்:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக களமிறங்கிவர் நடிகை பரீனா. அவர் சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்து இருக்கிறார். சின்னத்திரையில் ஒரு வில்லிக்கு இத்தனை ரசிகர்களாக என சொல்லும் அளவிற்கு அவர் பிரபலமாக இருக்கிறார். பரீனாவிற்கு நடிப்பில் இது தான் முதல் வாய்ப்பாக இருந்தாலும் கொடூரமான வில்லியாக அங்கீகாரம் பிடித்து இருக்கிறார்.
சஞ்சீவ் ஆலியாவின் பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!
இந்நிலையில் பரீனா கர்ப்பமாக இருந்த போது கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வரை அவர் நடித்து வந்த நிலையில், குழந்தை பிறந்த பின் ஒரு மாதம் மட்டுமே இடைவெளி எடுத்துக் கொண்டார். அதன் பின் மீண்டும் நடிக்க தொடங்கிய அவர் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அபி டெய்லர் சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். வில்லியாகவே பார்த்த ரசிகர்களுக்கு பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் பரீனா நடித்ததால் உற்சாகத்தில் இருந்தனர்.
இரண்டு சீரியல்களிலும் அவர் நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் தற்போது அபி டெய்லர் பவானி கதாபாத்திரத்தில் இருந்து அவர் விலகி இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இனி பவானி கதாபாத்திரத்தில் ராஜபார்வை சீரியல் நடிகை கீர்த்தி நடிக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் அவர் தொடர்ந்து வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதால் ரசிகர்கள் சற்று நிம்மதியாக இருக்கின்றனர்.