சென்னை மழையில் ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங்கில் அருண் – போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா நடிகர் அருண் பிஸியான ஷூட்டிங் ஸ்பாட் படப்பிடிப்பிற்கு இடையில் மழையில் நனைந்த படி புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அருணின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் அருண்:
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்துள்ளார். இதனால் இவருக்கு நாளுக்கு நாள் அதிக ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். அருணிற்கு பெண் ரசிகைகளும் அதிகம் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் அருண் எப்போது ஆக்ட்டிவாக பதிவுகளை இட்டு வருவார். அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து பல ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் அவரது இணைய பக்கங்களில் வெளியிடப்படும்.
ராமேஸ்வரத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனால் சீரியலில் அடுத்து வரும் காட்சிகளை ரசிகர்கள் யூகித்து விடுவார்கள். தற்போது பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் புரிதல் தான் இல்லை. அதற்காக இவர்கள் இருவரும் ஆறு மாதங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு விடுகிறார். இதனால் பாரதி வேறு வழியில்லாமல் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வது போல் காட்சிகள் வர உள்ளது.
தற்போது சென்னையில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. நடிகர் அருண் சின்ன விஷயங்கள் எதை செய்தாலும் அது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும். இந்நிலையில் அவர் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் படப்பிடிப்பிற்கு இடையில் மழையில் நினைந்த படி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பாரதி மழையில் நனைவதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.