‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இயக்குனருக்கு வந்த சோதனை – விலகிய அஞ்சலி! அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் சின்னத்திரையின் நம்பர் 1 தொடராக பல மாதங்களாக இருந்து வந்த நிலையில்,சமீபத்தில் சற்று சரிவை கண்டுள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக உள்ளார்.
அஞ்சலி விலகல்:
பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் சின்னத்திரையின் முன்னனி இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் வெளியாகும் சீரியலில் நடிக்க பல பிரபலங்களும் காத்திருக்கின்றனர். தற்போது விஜய் டிவியில் பிரவீன் ஒரே நேரத்தில் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா 2, நம்ம வீட்டு பொண்ணு ஆகிய 3 சீரியல்களை இயக்கி வருகிறார். அனைத்து சீரியல்களும் தற்போது மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது. ஆனால் இயக்குனருக்கு தான் சோதனை மேல் சோதனையாக வருகிறது.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதாவை அழ வைத்த அபிராமி – இதற்கு தானா? கலாய்க்கும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா சீரியலில் இருந்து விலகியதால், அவரது கதை அப்படியே முடிக்கப்பட்டது. அதன்பிறகு, அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் விலகினார். இதனால் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சி நிலவியது. ஆனால் அதன்பிறகு, யாருமே எதிர்பாராத வகையில் கதையின் நாயகியான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி பட வாய்ப்புகள் வருவதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து விலகினார்.
இதனால் கண்ணம்மா வேடத்தில் புதிதாக வினுஷா தேவி என்ற மாடல் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் அளிக்கும் விதமாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதை இயக்குனர் பிரவீன் அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். அதில், மிகவும் சலிப்பாக எத்தனை பேரை மாற்றுவது என்று குறிப்பிட்டுள்ளார்.