ஜீ தமிழ் “அமுதாவும் …..?” சீரியலில் டீச்சராக களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” அஞ்சலி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தவர் கண்மணி மனோகரன். அவர் தற்போது சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் “அமுதாவும் …..?” என்ற சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அந்த சீரியல் கதை மற்றும் இவரின் கதாபாத்திரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை கண்மணி:
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் அறிமுகமாகி பின் மக்கள் மனதில் இடம் பிடித்து அதன் பின் கதாநாயகியாக பல சீரியல் நடிகைகள் மாறி இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரமாக அஞ்சலியாக அறிமுகமானவர் நடிகை கண்மணி. அவருக்கு நடிப்புத்துறையில் இதுவே முதல் முறை. இதில் தன்னுடைய அழகான நடிப்பால் ஏகப்பட்ட மக்கள் மனதை கவர்ந்து இருக்கிறார்.
அவர் சீரியலில் முதலில் வில்லியாக நடித்தாலும் அதன் பின் கண்ணம்மாவிற்கு ஆதரவாக அவர் பேசும் காட்சிகள் அவருக்கு இன்னும் கூடுதல் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. இந்நிலையில் அவர் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு முன்னதாக அவருடன் நடித்த அகில் சினிமா வாய்ப்புகள் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது கண்மணி ஜீ தமிழில் அமுதாவும் …..? என்ற புதிய சீரியலில் களமிறங்க இருக்கிறார்.
இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதில் அவர் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த சீரியலின் பெயர் அமுதாவும் …..? என பாதி பெயரை மட்டுமே சேனல் தரப்பில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகன் பெயர் என்ன என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள் இந்த சீரியல் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். ஆசிரியையாக, பாவாடை தாவணி அணிந்து கொண்டு கண்மணி பார்க்கவே செம அழகாக இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மாங்கல்ய தோஷம் சீரியலில் நடித்த அருண் பத்மநாபன் நடிக்க இருக்கிறார்.