‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினிக்கு நடந்த சோகம் – தவறவிட்ட முக்கிய பட வாய்ப்புகள்!
தற்போது வெள்ளித்திரையை நோக்கி படை எடுத்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி, இதற்கு முன்னதாக சில தமிழ் திரைப்படங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களை தவற விட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது எந்த திரைப்படம் என்பது குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.
நடிகை ரோஷினி
விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. கிட்டத்தட்ட 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த நடிகை ரோஷினி சமீபத்தில் சீரியலை விட்டு விலகினார். அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்திருக்கிறது.
கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சீரியல் நடிகைகள் – வினுஷாவை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள்!
என்றாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலக மனமில்லாமல் இருந்து வந்த ரோஷினி, நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்திற்காக எதிர்பார்த்து வந்தார். இந்நிலையில் நடிகை ரோஷினி தேடியதை போல சிறப்பான கதாப்பாத்திரம் அமையவே சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகினார். இப்போது இத்தொடரில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் இவருக்கு பதிலாக புதுமுக நடிகை வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினி நடித்து வந்த போது, வேண்டாம் என்று மறுத்த சில திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் செங்கேணி மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் மாரியம்மாள் என்ற கதாப்பாத்திரங்களை நடிகை ரோஷினி நடிக்க இருந்தாராம். என்றாலும் இந்த 2 வாய்ப்புகளையும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்காக தவற விட்டிருக்கிறார் ரோஷினி.
நடிகை சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
ஒருவேளை இவர் இந்த 2 திரைப்படங்களிலும் நடித்திருந்தால், தமிழ் சினிமாவில் கண்டிப்பாக தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய இடத்தை பெற்றிருப்பார் என அவரது ரசிகர்கள் தற்போது வருத்தம் தெரிவித்து வருகின்றனர். என்றாலும், அடுத்தடுத்த முயற்சிகளில் நிச்சயம் கண்ணம்மா கதாநாயகியாக கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.