‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகைகள் – இயக்குனர் ஆதங்கம்!
விஜய் டிவி சீரியல்களில் டாப் வரிசையில் இருக்கும் முக்கிய சீரியல் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து அந்த சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் வேதனையுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. டாப் சீரியலாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோ பாரதியாக அருண் மற்றும் ஹீரோயின் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்தனர். சீரியல் TRPயில் முதலிடத்தில் இருந்த போது திடீரென ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக அவர் சாயலில் இருக்கும் வினுஷா தேவி களமிறங்கினார். வினுஷா தேவியை தற்போது கண்ணம்மாவாக ரோஷினி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இதே சீரியலில் பாரதிக்கு தம்பியாக அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன், சினிமா வாய்ப்புகள் கிடைப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக சுகேஷ் தற்போது அகிலனாக நடித்து வருகிறார். மேலும் சீரியலில் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்தவரும் இறந்த நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்னொரு முக்கியமான கதாபாத்திரமும் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை பிரச்சனைக்கு காரணமான நபரை கண்டுபிடித்த கண்ணன் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதாவது சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அகிலின் மனைவியாக நடித்து வரும் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி மனோகரன் சீரியலில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் சீரியலில் பல கதாபாத்திரம் மாற்றுவது குறித்து இயக்குனர் பிரவீன் பென்னெட் வேதனையுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “அய்யோ அய்யோ எத்தனை மாற்றம்… என்னத்த சொல்றது… எத்தனை ஷப்பா..” என குறிப்பிட்டு இருக்கிறார்.