விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் மக்களிடம் பிரபலமான டாப் சீரியல் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து 8 வருடங்களுக்கு பின் கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை தெரிய வருகிறது. இது பற்றி கண்ணம்மா அனைவரிடமும் கேட்க யாரும் தெரியவில்லை என சொல்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வெண்பா கண்ணம்மாவை பாரதியிடம் விவாகரத்து செய்ய சொல்கிறார்.
வெண்பாவை கொலை செய்து ஜெயிலுக்கு செல்லும் சௌந்தர்யா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் திடீர் திருப்பம்!
அப்போது தான் உன்னுடைய குழந்தையை கொடுப்பேன் என சொல்லி மிரட்டுகிறார். உடனே கண்ணம்மா விவாகரத்து செய்ய சம்மதிக்க, சௌந்தர்யா வந்து ஹேமா தான் உன்னுடைய குழந்தை என்ற உண்மையை சொல்கிறார். உடனே கண்ணம்மா சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, சௌந்தர்யாவிடம் கோபித்து கொள்கிறார். இதனை நாட்களாக தாய் பாசம் தெரியாமல் என் குழந்தையை வளர்க்க என்ன காரணம் என கோபத்துடன் கண்ணம்மா கேட்க, உன்னையும் பாரதியையும் சேர்த்து வைக்க தான் இப்படி செய்தேன் என சௌந்தர்யா சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
மேலும் நாளைய எபிசோடில் வெண்பாவை சௌந்தர்யா துப்பாக்கியால் சுடுவது போலவும் அவர் இறந்துவிட்டது போல காட்டப்பட்டது. அதனால் இந்த சீரியல் விரைவில் முடிய இருக்கிறது எனவும், கண்ணம்மாவும் பாரதியும் அடுத்த சீசனில் சேருவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் லட்சுமி ஹேமா பெரியவர்களாக மாறி இருக்கின்றனர். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் முடிய இருப்பதை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்த சீரியல் முஇயட்டும் என்றுதச்ன் இருப்பார்கள். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது. ஒரு ஒப்பாரி முடிந்தால் அடுத்தது..