மீண்டும் 8 வருடங்கள் கழித்து தொடங்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2? வெளியான ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி திடீரென திருந்தியது போல காட்டப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் 8 வருடங்களுக்கு பின்னர் கதை செல்வது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சி TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. பல்வேறு திருப்பங்களுடன் இந்த சீரியலின் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. 8 வருடங்களுக்கு பின்னர் குழந்தைகளுடன் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முதல் சீசனில் மறைக்கப்பட்ட அனைத்து உண்மைகளும் ஒன்று ஒன்றாக வெளியாகி வருகிறது. முக்கியமாக பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்திருந்த நிலையில் கண்ணம்மா மீது தப்பு எதுவும் இருக்காது என நினைக்கிறார். கண்ணம்மாவுடன் மீதமுள்ள வாழ்க்கையை சேர்ந்து வாழ இருப்பதாக பாரதி தனது குடும்பத்தினரிடம் சொல்வது போல காட்டப்படுகிறது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – டாப் கமெண்ட்ஸ்!
இது உண்மையாகவே நடந்தால் கண்ணம்மாவை பாரதி ஏற்றுக் கொள்வாரா? லட்சுமி எப்படி இந்த உண்மையை தாங்குவார். கண்ணம்மா பாரதியை மன்னித்து விடுவாரா, ஹேமா உன்னுடைய குழந்தை தான் என சௌந்தர்யா சொல்வாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இவ்வாறு இருக்க மீண்டும் 8 வருடங்கள் கழித்து கதை செல்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் லட்சுமி வளர்ந்து பெரிய ஆளாக இருப்பது போல எடிட்டிங் உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் புதுவித கர்ப்பகால போட்டோஷூட் – இன்ஸ்டா வைரல் !
கண்ணம்மா செம மாடலாக பஸ்ஸில் வருவது போல காட்டப்படுகிறது. இது உண்மை தானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் உண்மையிலேயே பாரதி திருந்தி விட்டால் கதை எப்படி செல்லும், அஞ்சலிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்குமா, வெண்பா தான் அனைத்திற்கும் காரணம் என்பது பாரதிக்கு தெரிய வருமா, கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்திருக்கும் காட்சிகள் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
பாரதிகண்ணம்மா சீரியல் அடுத்தது என்ன என்று ஆவலோடு இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பில் உள்ளார்கள் இந்த சீரியல் நகர்த்தும் விதம் மிகவும் அருமை இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பாரதி கண்ணம்மா வெண்பா இரண்டு பெண் குழந்தைகள் நடிப்புகள் மிக மிக சிறப்பு பாரதி சௌந்தர்யா கண்ணம்மா எபிசோடில் வந்தாலே சீரியல் களைகட்டி விடுகிறது என்கிறார்கள் இல்லதரசிகள்
Pls end this serial soon… No Logic… Only Loopholes….. Always mind voices speaking…. Cannot tolerate every time….
One of the worst serial….really waste of time….there is no logic….always favour for villi character…..most irritating one….makku bharathi character…waste kannamaa character….venba ne nalla pandra ma….