மனம் திருந்தி கண்ணம்மாவுடன் சேர விரும்பும் பாரதி – வெண்பா ஷாக்! வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பற்றி சந்தேகப்பட்டு பிரிந்திருக்கும் பாரதி எப்போது திருத்துவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பாரதி மனம் திருந்துவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவி டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில், பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. 8 வருடங்களுக்கு பின்னர் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிந்துள்ளது. மேலும் வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையும் கண்ணம்மாவிற்கு தெரிய வந்துள்ளது. அடுத்து பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!
இந்நிலையில் பாரதி மனம் திருந்துவது போல ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி வருகிறது. அதில் பாரதியை பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறார். அவர் தனது அண்ணன் மிகவும் தங்கமானவர், என்னைக்கு என் அண்ணி மீது சந்தேகம் வந்ததோ அன்னைக்கு தான் எல்லாம் மாறிவிட்டது என கவலையுடன் சொல்கிறார். அதை கேட்ட பாரதிக்கு பழைய நினைவுகள் வந்து மனம் வருத்தமடைகிறது. அப்போது அங்கே வெண்பா வர வெண்பாவிடம் ஒரு வேளை கண்ணம்மா எந்த தவறும் செய்திருக்க மாட்டாளோ என வருத்தப்படுகிறார்.
மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த VJ அர்ச்சனா – தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!
அதை கேட்ட வெண்பா போச்சு இனி கண்ணம்மா பற்றி பாவப்பட தொடங்கி விட்டான். இனி எப்படி இவன் மனதை மாற்றுவது என நினைக்கிறார். பின் பாரதி சௌந்தர்யாவை பார்க்க செல்கிறார். அங்கே அஞ்சலி, வேணு, அகில் என அனைவரின் முன்னிலையில் கண்ணம்மா தப்பே செய்யாமல் இருந்திருக்கலாமே, என் மீதும் தப்பாக இருக்கலாமே, இத்தனை வருஷம் பிரிந்து இருந்திருக்கிறோம், இனிமேல் சேர்ந்து இருக்க வேண்டும் என என் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது என பாரதி சொல்கிறார். இது உண்மையாகவே நடக்க இருக்கிறதா? இல்லை கனவாக முடிய உள்ளதா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.