வெண்பாவிடம் இரட்டை குழந்தை பற்றி கேட்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோட்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையை வெண்பா கடத்தி வைத்து மிரட்டுவதாக கண்ணம்மா பாரதியிடம் சொல்கிறார். இது பற்றி பாரதி வெண்பாவிடம் கேட்கிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் இரட்டை குழந்தைகள் பற்றி தெரிந்து கொண்ட கண்ணம்மா இரண்டாவது குழந்தையை தேடி அலைகிறார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெண்பா இரண்டாவது குழந்தை என்னிடம் தான் இருக்கிறது என பொய் சொல்லி கண்ணம்மாவை மிரட்டுகிறார். பதறி போன கண்ணம்மா போலீசில் புகார் அளிக்க செல்ல அப்போதும் வெண்பா குறுக்கிட்டு கண்ணம்மாவை மிரட்டி வீட்டிற்கு வர சொல்கிறார்.
இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா, பாரதியிடம் உதவி கேட்கும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!
மேலும் பாரதியிடம் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும். அப்போது தான் உன் குழந்தை உன்னிடம் கிடைக்கும் என மிரட்டுகிறார். இந்நிலையில் கண்ணம்மா என்ன செய்வது என்று தெரியாமல் பாரதியிடம் உதவி கேட்கிறார். பாரதியை தனியாக வர சொல்லி, முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார். உடனே பாரதியும் வர கண்ணம்மா நான் என்னுடைய பாரதி மாமாவிடம் பேச வேண்டும் என சொல்கிறார். அதற்கு பாரதியும் நான் என்னுடைய பழைய கண்ணம்மாவாக இருந்தால் பேசிருப்பேன் என சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவிற்கு பிடித்தமான டிஷ் – எப்படி செய்வது?
இந்நிலையில் கண்ணம்மா நம்ம குழந்தையை காணவில்லை என சொல்கிறார். நம்ம குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள் என சொல்ல, யாரு என பாரதி கேட்க வெண்பா தான் என கண்ணம்மா சொல்கிறார். பாரதியும், வெண்பாவும் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் வெளியாகி உள்ளது. ஒருவேளை பாரதி வெண்பாவிடம் இது பற்றி கேட்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.