இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா, பாரதியிடம் உதவி கேட்கும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், இன்றைய எபிசோடில் பாரதியிடம் தனியாக பேச வேண்டும் என கண்ணம்மா கேட்டதற்கு இணங்க பாரதியும் வருகிறார். அப்போது நம்ம குழந்தையை கடத்தி வைத்து கொண்டு மிரட்டுகிறார்கள் என கண்ணம்மா சொல்ல, பாரதி யார் என கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் கண்ணம்மா இரண்டாவது குழந்தை பற்றி குழப்பத்தில் இருக்கும் நிலையில், எல்லாரிடமும் கேட்டு அவர்கள் தெரியவில்லை என சொல்லி விட்டனர். ஆனால் அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத கண்ணம்மா பாரதியிடம் கேட்போம் என நினைத்து, பாரதிக்கு போன் செய்கிறார். பாரதி எடுத்து என்ன என்று கேட்க, கண்ணம்மா தயக்கத்துடன் பேச தொடங்குகிறார். தனியாக பார்த்து பேச வேண்டும் என கண்ணம்மா கேட்க என்ன விஷயம்? என பாரதி கேட்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவிற்கு பிடித்தமான டிஷ் – எப்படி செய்வது?
நேரில் தான் பேச முடியும் என கண்ணம்மா சொல்ல, முதலில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பதை சொன்ன இடத்திற்கு வருகின்றனர். அங்கே ஒருவரை ஒருவர் சந்தித்த போது அவர்களுக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. இந்நிலையில் கண்ணம்மா முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என சொல்ல, பாரதி என்ன என்று கேட்கிறார். அப்போது கண்ணம்மா நான் என்னுடைய பழைய பாரதி மாமாவிடம் பேச வேண்டும் என சொல்ல, என் பாரதி மாமா எல்லாருக்கும் உதவி செய்வார் பாசம் என்றால் அவரிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார்.
சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!!
உடனே பாரதி என்ன என்று கேட்க, நம்ம குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள் என சொல்ல, நம்ம குழந்தையா யாரு என பாரதி கேட்க வெண்பா தான் என கண்ணம்மா சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், கண்ணம்மா சொன்னதை பாரதி நம்புவாரா அல்லது கண்ணம்மா மீது கோவப்படுவாரா என்ற எதிர்பார்ப்பில் நாளைய எபிசோடிற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.