கண்ணம்மா நள்ளிரவில் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், நள்ளிரவில் கண்ணம்மா மாவு அரைத்து வேலை செய்வதை பார்த்து பாரதி வருத்தப்படுகிறார். இது பற்றிய புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
மக்களிடம் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த படி கண்ணம்மாவும், பாரதியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. 8 வருடங்களுக்கு பின்னர் கண்ணம்மாவின் வீட்டில் பாரதி தங்குகிறார். பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமி என நான்கு பேரும் ஒரே வீட்டில் இருப்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்று முதல் சென்னையில் கடைகளை திறக்க அனுமதி – 2 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்!
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இரவு பாரதி தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ சத்தம் கேட்கிறது. பாரதி எழுந்து வந்து வெளியே பார்க்க இரவு தூங்காமல் கண்ணம்மா மாவு அரைத்து கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா என்ன வேண்டும் என்று கேட்க தண்ணி வேண்டும் என சொல்லி சமாளிக்கிறார். பின்னர் கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவுகள் – முதல்வர் இன்று ஆலோசனை!
அதில் கண்ணம்மாவிடம் ஏன் இரவு இப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்கிற என்று கேட்கிறார். இரவு மாவு அரைத்து பகலில் விற்றால் தான் நாங்க சாப்பிட முடியும் என்று கண்ணம்மா சொல்கிறார். அதை கேட்டு பாரதியின் மனம் இறங்குகிறது. பிறகு மாவு சட்டியை கண்ணம்மா கீழே போட போக அதை பாரதி தாங்கி பிடிக்கிறார். இவ்வாறு ப்ரோமோவில் காட்டப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும்? பாரதி மனம் மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.