வெண்பாவை வம்பிழுக்கும் கண்ணம்மா, அந்நியன் ஸ்டைலில் நடிப்பு – வெளியான “பாரதி கண்ணம்மா” ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில்,வெண்பா குழந்தையை கொடுப்பதாக சொல்லி கண்ணம்மாவிடம் பொய் சொன்னது தற்போது தெரியவருகிறது. இதனால் கண்ணம்மா வெண்பாவிடம் என்ன சொல்ல இருக்கிறார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், வெண்பா கண்ணம்மாவின் குழந்தையை தரவேண்டும் என்றால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என மிரட்டுகிறார். உடனே கண்ணம்மா பயந்து கையெழுத்து போட செல்ல அந்த நேரம் பார்த்து சௌந்தர்யா வந்து ஹேமா தான் உன்னுடைய குழந்தை என்ற உண்மையை சொல்கிறார். அதனால் கண்ணம்மா ஹேமாவை கூப்பிட செல்ல, சௌந்தர்யா கண்ணம்மா காலில் விழுந்து 4 நாள் அவகாசம் கேட்கிறார். கண்ணம்மாவும் சரி என சொல்கிறார்.
‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கலாட்டாவுடன் தொடங்கும் திருமணம் – இந்த வார ப்ரோமோ!
இந்நிலையில் கண்ணம்மா வருவார் என வெண்பா வக்கீலுடன் காத்துக் கொண்டிருக்க, நீண்ட நேரம் ஆகியும் கண்ணம்மா வராததால் வக்கீல் கிளம்பி விடுகிறார். உடனே வெண்பா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க அந்த நேரம் பார்த்து கண்ணம்மா வருகிறார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் வெண்பா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டியா என கேட்க, என் குழந்தையை காட்டு வெண்பா உடனே நான் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.
முதலில் உன் கையெழுத்து என வெண்பா சொல்ல, கண்ணம்மா வெண்பாவை மிரட்டுகிறார். பின் புத்தி கேட்டு போய் இப்படி எல்லாம் பண்ணுறேன் என கண்ணம்மா அழுக, என் பொண்ணு மட்டும் இப்போ வரவில்லை என்றால் அப்படியே உன் கழுத்தை நெரித்து என சொல்கிறார். பின் கோவப்பட்டு என் குழந்தையை எதுவும் செய்யாதே என அழுகிறார். இதை பார்த்து வெண்பா என்ன இப்படி நடிக்கிறாள் என குழப்பத்தில் இருக்கிறார். திரும்ப உன் புள்ளைய தேடி என்னிடம் தான வருவா அப்ப இருக்கிறது என வெண்பா கிளம்ப, இது வெறும் ஆரம்பம் தான் இனிமேல் தான் உனக்கு இருக்கிறது என கண்ணம்மா சொல்கிறார்.