வெண்பாவிடம் சிக்கிக் கொண்ட ஹேமா, லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு புகைப்படம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் மறைந்திருக்கும் பல ரகசியங்கள் உடையும் முக்கியமான கட்டம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கண்ணம்மாவின் இரு குழந்தைகளும் வெண்பாவின் மடியில் உறங்கி கொண்டிருப்பது போன்ற படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்வுகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த கதைக்களத்தில் அடுத்து வரும் எபிசோடுகளில் பல ஸ்வாரசியமான திருப்பங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அஞ்சலியின் சீமந்த நிகழ்வுக்கு வரும் கண்ணம்மா, சௌந்தர்யாவை அதிர்ச்சிக்குளாக்கி இருக்கிறார். கண்ணம்மா வந்தால், கட்டாயமாக இன்னொரு குழந்தை பற்றி கேட்பாள் என்பது சௌந்தர்யாவின் பயமாக உள்ளது.
சந்தியாவை வீடு தேடி வந்து வாழ்த்திய போலீஸ், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!
மறுபுறத்தில் கண்ணம்மா, அஞ்சலியின் வளைகாப்புக்கு வர மாட்டாள் என எண்ணிய வெண்பா பாரதியுடன் ஜோடி போட வந்துகொண்டிருக்க அவருக்கும் அதிர்ச்சி காத்துக்கொண்டுள்ளது. சண்முகம் பாரதி, கண்ணம்மா இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை அவரது வீட்டில் மாட்டி வைத்துள்ளார். இதை யார் பார்த்தாலும் சிக்கல் தான். இதை தொடர்ந்து அஞ்சலியின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் அறிய வரலாம்.
TN Job “FB Group” Join Now
இந்த மொத்த கதை முடிச்சுகளும் அவிழும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சமயத்தில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் படப்பிடிப்பின் போது எடுத்துள்ள சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஹேமா, லட்சுமி என்ற 2 சுட்டி குழந்தைகள் வெண்பாவின் மடியில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தவாறு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதற்கு அருகில் அமர்ந்திருக்கும் கண்ணம்மா குழந்தைகளை பார்த்து சிரிப்பது போல இருக்கிறார். இந்த காட்சிகள் சீரியலில் எப்போது ஒளிபரப்பாகும் என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருந்து வருகிறது.