கண்ணம்மாவுடன் ஹேமாவை சேர்க்க திட்டமிடும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டாவது குழந்தை ஹேமாவை கண்ணம்மாவுடன் சேர்க்க அஞ்சலி முயற்சித்து வருகிறார். அதற்காக பல வேலைகளை பாரதிக்கு தெரியாமல் சேதம் செய்கிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு பிறகு தனக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை இருக்கிறது என்ற உண்மை கன்னமாவுக்கு தெரிகிறது. கடைசியில் அது சமையல் அம்மா என்று அழைக்கும் ஹேமா தான் இன்னொரு குழந்தை என்று தெரிகிறது. இந்த உண்மை தெரிந்த நாள் முதல் கண்ணம்மாவிற்கு தனது குழந்தை ஹேமாவை பிரிந்து இருக்க முடியவில்லை. எப்படியாது நான் தான் உன் அம்மா என்ற உண்மையை ஹேமாவிடம் சொல்ல முயற்சித்து வருகிறார். சௌந்தர்யா இதை தடுக்க முயற்சித்து வருகிறார். கோயிலுக்கு அழைத்து சென்று உண்மையை சொல்ல முயலுகிறார். அந்த நேரம் சௌந்தர்யா அதை தடுத்து விடுகிறார்.
விஜய் டிவி சீரியல் பிரஜின் – சாண்ட்ரா ஜோடியின் வாழ்க்கை கதை | ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பின்னர், அடுத்ததாக கண்ணம்மா எப்படியாவது தான் தான் ஹேமாவின் அம்மா என்பதனை ஹேமாவிடம் எப்படியாவது தெரிவித்திட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். அதற்கு பாரதி குடும்பத்தினர் தொடர்ச்சியாக தடுத்து வருகின்றனர். தற்போது ஹேமாவை தனது வீட்டில் விடுமாறு கண்ணம்மா கேட்கிறார். ஆனால், அத்தனையும் தடுத்து விடுகின்றனர். பின்னர், பாரதி ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார். ஹேமா வந்து நின்றதும் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா முதலில் அது கனவு என்று நினைக்கிறார். பின்னர், அது உண்மை என்று அறிந்ததும், ஹேமாவிடம் பேச்சு கொடுக்கிறார்.
தீவிரமெடுக்கும் கொரோனா, பள்ளிகளை மூட அதிரடி உத்தரவு – சீனா நடவடிக்கை!
எதோ பேசி கொண்டு இருக்கும் போது அப்போது அஞ்சலி வந்து விடுகிறார். ஹேமாவிடம் பேச வேண்டும் என்பதற்காக தான் வந்ததாக கூறுகிறார். இதனால் கண்ணம்மா வேறு வழி இல்லாமல் உண்மையினை கூற முடியாமல் தவிக்கிறார். அப்போது அஞ்சலி ஹேமாவிடம் உண்மையை கூற அஞ்சலி உதவுகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். அஞ்சலி ஆரம்பத்தில் கண்ணம்மாவிற்கு எதிரியாக இருந்து விட்டு தற்போது நல்லது செய்ய நினைப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.