‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் சூழ வளைகாப்பு நிகழ்ச்சி – ஆனந்த கண்ணீரில் பரீனா!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பரீனா. அவர் தற்போது மாசமாக இருக்கும் நிலையில் அவரது கணவர், வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை அவருக்கே தெரியாமல் ஏற்பாடு செய்துள்ளார். இதில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வெண்பா வளைகாப்பு:
விஜய் டிவியில் டாப் சீரியல் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரமான வில்லி வெண்பாவாக நடிப்பவர் நடிகை பரீனா அசாத். அவர் தற்போது நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் வயிறு தெரியாமல் சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு தற்போது 8 மாதம் ஆன நிலையில் அவரது கணவர் அவருக்கே தெரியாமல் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் அவருக்கு நெருக்கமான சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 – களமிறங்கும் ‘செம்பருத்தி’ பிரியா ராமன்? ரசிகர்கள் ஷாக்!
முதலில் ஒரு இடத்திற்கு கூட்டிக் கொண்டு அவரது கணவர் வருகிறார். அப்போது சில சின்ன குழந்தைகள் அவர்கள் முன்னாள் நடனம் ஆடுகின்றனர். என்னவென்று புரியாமல் அவர் நிற்கிறார். அப்போது ஒரு இடத்தில் அவரை அமர வைத்து வளைகாப்பு புடவையை எடுத்து வருகிறார். அதை பார்த்த பரீனா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். பின்னர் கணவன், மனைவி இருவரும் புது உடை மாற்றி வருகின்றனர். அவர் கதவை திறக்கும் போது அங்கே அவருக்கு நெருக்கமான நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் மீண்டும் அழுக தொடங்கி விட்டார்.
BMW கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். பாரதியாக நடிக்கும் அருண், கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி, அஞ்சலியாக நடிக்கும் ஸ்வீட்டி, பழைய அகிலனாக நடித்த அகில் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருடனும் சேர்ந்து குத்தாட்டம் போட பரீனாவும் தனது வயிறை வைத்துக் கொண்டு குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.