‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ப்ரோமோ ஒன்னு, கதை ஒன்னு – குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியின் TRP ரேட்டிங் கிங் ஆன ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்றில் வேணுவுக்கு நெஞ்சுவலி வந்து பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கும் படியான காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில் அது ரசிகர்களை சற்று கடுப்பாக்கி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு ரீச் கிடைத்து வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மக்களை கவரும் வண்ணம் வாரந்தோறும் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகும். இதை வைத்து தான் அந்த வாரத்துக்கான கதைக்களம் பயணிக்கும். குறிப்பாக ஒவ்வொரு ப்ரோமோ மூலம் கிடைக்கும் ரீச் காரணமாக அந்த வார எபிசோடுகள் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பழைய ஐஸ்வர்யா – கண்ணனுடன் வெளியான வீடியோ!
அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ப்ரோமோ பார்வையாளர்களை சற்று குழப்பியுள்ளது. ஏனென்றால் பாரதியின் அப்பா வேணுவுக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சொல்லி வைத்தாற்போல பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்லி அதுவே தனது கடைசி ஆசை என கூறுகிறார். இது நிஜமாக நடக்கிறதா அல்ல நாடகத்துக்குள் நாடகமா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
ஏனென்றால் கடந்த வாரம் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ப்ரோமோவில், பாரதி தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதாகவும் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வது போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள், ஒரு வழியாக பாரதிக்குள் ஏற்பட்ட மனமாற்றத்தை கண்டு ஆறுதல் அடைந்தனர். ஆனால் அந்த சீரியல் எபிசோடுகள் ஒளிபரப்பாகும் போது தான் அது பாரதியின் நடிப்பு என தெரிய வந்தது.
அதே போல இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள வேணுவின் நெஞ்சுவலி, நாடகமாக இருக்குமா என பாரதி கண்ணம்மா சீரியலின் பார்வையாளர்களை சற்று குழப்பியடித்து கொண்டிருக்கிறது. இப்போது ஒரு கோட்டில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பயணிக்கிறது என்றால் அதில் ஸ்வாரசியத்தை கூட்டுவதற்காக எடுக்கப்படும் சில தேவையான காட்சிகள் ரசிகர்களை சற்று அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு லட்சுமி அம்மா விலகியதற்கு காரணம்? நடிகை ஷீலா பேட்டி!
குறிப்பாக குழந்தை பற்றிய விஷயத்தில் வெண்பா, கண்ணம்மாவை மிரட்டுவது கதைக்குள் தேவையில்லாத ஒன்றாக ரசிகர்களின் கருத்துக்கள் கூறுகிறது. வெண்பா கதாப்பாத்திரத்துக்கு அவசியம் இல்லாத நேரத்தில் அது ஏன் இடையூறு என்றும் அதிலும் மொத்த எபிசோடுகளையும் குழப்பும் வகையில் வெண்பா வரும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. என்றாலும் ஒரு ப்ரோமோ மூலமே ரசிகர்களை கவர்ந்து வைப்பது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்குரிய வழக்கமான பாணி ஆகிவிட்டது.
பாரதி கண்ணம்மா போர் அடிக்கிறது. தொடரை வேண்டும் என்றே இழுத்துக்கொண்டு இருக்கின்றனர்