கண்ணம்மாவை வம்பிழுக்கும் வெண்பா; பதிலுக்கு வெறுப்பேற்றும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
விறுவிறுப்பாக செல்லும் பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்த மாற்றங்கள் வரிசையாக நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய எபிசோட்டில் நடந்த விஷயங்களை காண்போம்.
பாரதி கண்ணம்மா:
இறுதியாக லட்சுமிக்கு சௌந்தர்யா சேமித்து கொடுத்ததை அறிந்து கோவப்படும் பாரதி வீம்பிற்கு வெண்பாவை வரவைத்து அவரை சமைக்க சொல்லி சாப்பிடுகிறார். இந்நிலையில், இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் கண்ணம்மா பற்றிய ஆழ்ந்த யோசனையில் இருக்கும் சௌந்தர்யாவை பார்த்து வேணு பேச வருகிறார். என்ன யோசனை என்று கேட்க பாரதி பற்றி நினைச்சா தான் கவலையா இருக்கு. ஹேமா கண்ணம்மாவோட பொண்ணுனு தெரிஞ்சா என்ன செய்வானு தெரியலை என்கிறாள். துளசி தான் இந்த விஷயத்தை சொல்லியிருக்கணும் என்று வேணு சந்தேகப்பட்டார்.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆனால் சௌந்தர்யா, இல்லை துளசி சொல்லியிருக்க மாட்டாள் என்று சொல்கிறார். எல்லா உண்மையையும் கண்ணம்மாவிடம் சொல்லிறலாம் என்று வேணு சொல்கிறார். ஆனால் வேண்டாம் என்று சௌந்தர்யா தடுக்கிறார். வெண்பா வீட்டில் சமையல் வீடியோ பார்த்துக் கொண்டிருக்க, சாந்தி ஏன் மா என்னை வேலையை விட்டு அனுப்ப போறீங்களா என்று சாந்தி கேட்கிறார். இல்லை சாந்தி, பாரதிக்கு புடிச்சதை சமைத்து குடுக்க தான் என்று சொன்ன உடன் சாந்தி சந்தோஷத்தில் ஸ்வீட் செய்ய செல்கிறாள். மேலும், கண்ணம்மா வீட்டில் லட்சுமி தூங்கி கொண்டிருக்கும் கண்ணம்மாவை எழுப்ப அவர் கண் விழிக்கவில்லை.
இதனால் பயந்து போன லட்சுமி பயந்து பாரதிக்கு கால் செய்கிறாள். அவர் லட்சுமி போனை எடுக்க வில்லை. இதனால் வெண்பாவிற்கு போன் செய்து சீக்கிரம் வரச்சொல்கிறாள் லட்சுமி. கண்ணம்மாவை டெஸ்ட் பண்ணிய வெண்பா விஷ ஊசியை போட முடிவு செய்கிறாள். ஆனால் அதற்குள் கண்ணம்மா முழித்து விடுகிறார். அப்போது கண்ணம்மாவிடம் இன்னொரு குழந்தை பற்றிய பேச்சை எடுக்கிறாள். உன் குழந்தை பற்றி நான் சொல்லணும்னா, நீ எனக்கு கால் பண்ணி மிஸஸ் வெண்பா பாரதி மேடமா என கேட்கணும் என்கிறாள்.
தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் – முதல்வர் கடிதம்!
உடனே கண்ணம்மா உன் கழுத்தை நெறிச்சு கொல்லனும் போல இருக்கு என்று கோவப்படுகிறார். உன் பொண்ண பத்தி தெரியணும்னா நா சொல்றத நீ கேட்டு தான் ஆகணும் என்று சொல்கிறார். வெண்பாவை திட்டிய கண்ணம்மா அவருக்கு டீ போட்டுக் கொடுத்து வெறுப்பேற்றுகிறார்.