ஹேமா, கண்ணம்மா வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டிற்கு அஞ்சலி ஹேமாவை அழைத்து கொண்டு வருகிறார். மறுபுறம் ஹேமா பிரிவை தாங்க முடியாமல் இருக்கும் பாரதி நாளைக்கு வீட்டிற்கு சென்று ஹேமாவை அழைத்து வர வேண்டும் என நினைக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை ஹேமா தான் என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரிகிறது. உடனே சௌந்தர்யாவிடம் ஹேமாவை அழைத்து செல்ல வர சௌந்தர்யா 4 நாட்கள் கெடு கேட்கிறார். சரி என கண்ணம்மா கிளம்ப ஹேமா நினைப்பாக இருக்கிறது என கண்ணம்மா சௌந்தர்யாவிடம் அழ அஞ்சலி ஒரு திட்டமிடுகிறார். நான் 4 நாட்கள் என் அம்மா வீட்டிற்கு போறேன், கூடவே ஹேமாவை அழைத்து செல்கிறேன் என சொல்ல பாரதி சரி என சொல்கிறார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – செண்பகத்திற்கு கிப்ட் வாங்க செல்லும் ரோஜா!
அப்போது அஞ்சலி கண்ணம்மா வீட்டிற்கு வர கண்ணம்மா சந்தோசமாக இருக்கிறார். அஞ்சலியை உடம்பை பார்த்துக்க சொல்லி அறிவுரை கொடுக்கிறார். மறுபக்கம் சௌந்தர்யா வேணு குடும்பத்தை நினைத்து வருத்தப்பட, பாரதிக்கு எங்கு திரும்பினாலும் ஹேமா நினைப்பாக இருக்கிறது. உடனே பாரதி ஹேமாவை அனுப்பியிருக்க கூடாது. மேலும் நாளைக்கு சென்று ஹேமாவை அழைத்து வர வேண்டும் என நினைக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து வெளியேறும் ரோஷினி? இன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பு!
என்னுடைய வாழ்க்கை முடிந்த நிலையில் நான் இருக்கும் போது ஹேமா தான் எனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுத்தால், அவள் என் வாழ்க்கையில் வராமல் இருந்தால் என்ன ஆயிருக்கும் என தெரியவில்லை. அவளை நான் யாருக்காகவும் பிரிய மாட்டேன் என பாரதி நினைத்து பார்க்கிறார். ஆனால் நாளை பாரதிக்கு உண்மை தெரிந்து கண்ணம்மா வீட்டிற்கு சென்று ஹேமாவை அழைக்க, கண்ணம்மா உண்மையை சொல்லி விடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.