இரட்டை குழந்தையை கண்டுபிடிக்க கண்ணம்மாவிற்கு உதவி செய்யும் பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், வேணுவிற்கு நெஞ்சுவலி வருவது போல நடித்து கண்ணம்மாவை வர வைத்து பாரதியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரவுள்ள எபிசோடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் விறுவிறுப்பான காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நல்லவனாக திருந்தியது போல நடித்து குடும்பத்தில் இருப்பவர்களை ஏமாற்றினார். அதை தொடர்ந்து இந்த வாரம் வேணு நெஞ்சு வலிப்பது போல நடித்து ஏமாற்றுகிறார். பதறிப்போன சௌந்தர்யா, அகிலை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே பாரதி அவரை பரிசோதனை செய்து பார்த்து எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறார்.
ஆனால் வேணு தன்னுடைய நடிப்பை தொடர்ந்து கண்ணம்மாவை வர சொல்லுங்க என சொல்கிறார். கண்ணம்மா வந்ததும் பாரதி அருகில் நிற்க வேண்டும் எனவும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் செய்ய சொல்கிறார். ஆனால் இருவரும் சத்தியம் செய்யாமல் இருக்க, கண்ணம்மாவை எங்களுக்காக வீட்டில் வந்து தங்கும்படி சொல்கிறார். ஆனால் கண்ணம்மா முடியாது என சொல்லி உங்க பையன் செய்த தவறை உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டால் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிப்பேன் என கண்ணம்மா சொல்கிறார்.
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை பற்றி கவலையில் இருக்கும் கண்ணம்மா பாரதியிடம் உதவி கேட்கிறார். ஆனால் பாரதி எனக்கு எதுவும் தெரியாது என உதவி செய்ய மறுக்கிறார். நீ உன் குழந்தையை கண்டுபிடிப்பது நடக்கவே நடக்காது என பாரதி சொல்கிறார். மேலும் வெண்பா வேற கண்ணம்மாவை மிரட்டி வருகிறார். பாரதி கண்ணம்மாவிற்கு உதவி செய்வாரா? பாரதிக்கு ஹேமா தான் தன்னுடைய குழந்தை என தெரிந்தால் என்ன ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.