அஞ்சலிக்கு இதய நோய், குழந்தை பிறப்பதில் சிக்கல் – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று அஞ்சலிக்கு இதயம் பலவீனமாக இருப்பதாக மருத்துவர் கூறி விடுகிறார். பிரசவத்தின் போது பெரிய பிரச்சனையாக மாறக்கூடும் என்று கூறியதால் அஞ்சலி மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல்:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவிடம் பாரதி கண்ணம்மா இறந்து விட்டதாக கூறுகிறார். இதனை கேட்டுவிட்டு ஹேமா மிகவும் அதிர்ச்சி அடைந்து தன்னால் இனி அம்மாவை பார்க்க முடியாதா என்று கூறி கதறி அழுகிறார். பாரதியும் ஆம் என்று ஹேமாவிடம் கூறி விடுகிறார். இதனால் சௌந்தர்யா மற்றும் அஞ்சலிக்கு கோபம் வருகின்றது. சௌந்தர்யா பாரதியை தனியாக சந்தித்து ஏன் அவ்வாறாக ஹேமாவிடம் கூறினாய் என்று கேட்கிறார். இதனால் பாரதி கொந்தளிக்க ஆரம்பித்து விடுகிறார்.
IPPB ன் வீட்டு வங்கி சேவைகளுக்கு மீண்டும் கட்டணம் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!
ஹேமா, கண்ணம்மா குறித்து பேசும் போது எல்லாம் தனக்கு மிகவும் கோபம் வருகிறது என்று கூறுகிறார். அதே போல் இனி ஹேமாவிடம் கண்ணம்மா பற்றி பேசக் கூடாது என்றும் கூறுகிறார். அவரை சௌந்தர்யா சமாதானம் செய்ய முயற்சிக்கும் போது பாரதி கத்தி விடுகிறார். இதனால் சௌந்தர்யா மிகவும் மனம் நொந்து விடுகிறார். பின், கண்ணம்மா வீட்டில் துளசி மற்றும் லட்சுமி அனைவரும் தங்களது மாவு பிசினஸ் குறித்து பேசுகின்றனர். ஒரு கடையில் தங்களது மாவு பாக்கெட்டுகள் நன்றாக இல்லை என்று கூறுவதாக கூறி வருந்துகின்றனர். பின், அனைவரையும் கண்ணம்மா சமாதானம் செய்கிறார்.
TN Job “FB Group” Join Now
அஞ்சலி மருத்துவரை காண அகிலனுடன் செல்கிறார். அப்போது மருத்துவர் அஞ்சலியிடம் அவரது இதயம் பலவீனமாக இருப்பதாகவும், அவருக்கு நெஞ்சில் ஏற்படும் வலி கூட மட்டுமே செய்யும் என்றும் கூறுகிறார். இதனால் அஞ்சலி மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். மருத்துவர் கூடுதலாக, பிரசவத்தின் போது குழந்தையின் உடல் நலனிற்கும், அஞ்சலியின் உடல் நலனிற்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.