‘பாரதி கண்ணம்மா’ அருண் மற்றும் ரோஷினிக்கு இடையிலான ஒற்றுமை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் நேற்று ஒரே நாளில் பிறந்தநாள் வந்திருக்கிறது. இவர்களின் இந்த ஒற்றுமையை அறிந்து ரசிகர்கள் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அவர்களின் வீட்டில் ஒருவராக மாறியுள்ள பாரதியும், கண்ணம்மாவும் புகழின் உச்சத்தில் உள்ளனர். தொடரின் ஆரம்பத்தில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கான காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றது. பாரதி, கண்ணம்மா காதலிக்கும் சமயங்களில் இவர்களின் ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த ஜோடிக்காகவே அதிக ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்க தொடங்கினர். அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி பாரதி, கண்ணம்மாவை திருமணம் செய்து அதன் பிறகு வந்த காட்சிகளும் வரவேற்பை பெற்றது.
“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு இடைவெளி விட்ட பாரதி அருண் – மணாலியில் குதூகலம்!
இந்நிலையில், கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி பட வாய்ப்புகள் காரணமாக சீரியலை விட்டு விலகி உள்ளார். இதனால் கண்ணம்மா ரசிகர்கள் பலரும் வேதனை அடைந்துள்ளனர். ரோஷினி கண்ணம்மாவாக இல்லாத சீரியலை பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். இதனை மீறி ரசிகர்களை சீரியலை பார்க்க வைப்பதற்காக தொடரில் பல திருப்பங்களை கொண்டு வந்துள்ளனர். புதிதாக நடித்து வரும் வினுஷா தேவியும் நல்ல முறையில் நடித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 30ம் தேதியான நேற்று அருண் மற்றும் ரோஷினி இருவருக்கும் பிறந்த நாள்.
போன வருடம் இவர்கள் இருவரின் பிறந்த நாளை பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங்கில் கொண்டாடினார்கள். இந்த வருடம் இருவரும் தனித்தனியாக தங்களது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். வட மாநிலத்திலத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அருண் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவில் பேசினார். அதில் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இன்று இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை நினைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.