விஜய் டிவியின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் புத்தம் புதிய சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. நம்ம வீட்டு மாப்பிளை என்று பெயரிப்பட்ட இந்த சீரியலில் ரோஷினி மற்றும் சித்து இருவரும் சேர்ந்து நடித்துள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சீரியல்:
விஜய் டிவியின் சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி ஆர்வம் இருந்து வருகிறது. அதன்படி பழைய கதையை மீண்டும் மீண்டும் அரைக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட புதிய புதிய தொடர்களை அறிமுகம் செய்து வருவது தான் இதற்கு காரணம். தற்போது விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி, மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ராஜபார்வை போன்ற தொடர்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக சென்று வருகிறது. இவை அனைத்துமே ரேட்டிங்கில் நல்ல இடத்தை பெற்று முன்னனியில் இருந்து வருகிறது.
இதை தவிர சமீபத்தில் முத்தழகு, தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீடு பொண்ணு, தமிழும் சரஸ்வதியும், வைதேகி காத்திருந்தாள் போன்ற தொடர்கள் புதிதாக ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த புதிய தொடர்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில், திங்கள் முதல் ஞாயிறு வரை தற்போது இரவு 10 -11 மணி வரை ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80வது நாளை நெருங்கி விட்டது. இந்த நிகழ்ச்சி விரைவில் முடிந்து விடும். இதனால் சேனலில் புதிய தொடர்கள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!
அதிலும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி மற்றும் ‘ராஜா ராணி 2’ சித்து இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கும் நம்ம வீட்டு மாப்பிளை என்ற பெயர் கொண்ட தொடர் பற்றிய ப்ரோமோ வெளியாகி வருகிறது. பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகிய ரோஷினி புதிய தொடரில் நடிக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ள நேரம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரோஷினியின் ரீஎன்ட்ரி குறித்து மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.