பாரதியின் மீதான காதலை போட்டுடைத்த வெண்பா – கடுப்பில் அகிலன்! சூடுபிடிக்கும் மெகா சங்கமம்!!

0
பாரதியின் மீதான காதலை போட்டுடைத்த வெண்பா - கடுப்பில் அகிலன்! சூடுபிடிக்கும் மெகா சங்கமம்!!
பாரதியின் மீதான காதலை போட்டுடைத்த வெண்பா - கடுப்பில் அகிலன்! சூடுபிடிக்கும் மெகா சங்கமம்!!
பாரதியின் மீதான காதலை போட்டுடைத்த வெண்பா – கடுப்பில் அகிலன்! சூடுபிடிக்கும் மெகா சங்கமம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ராஜா ராணியும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும்  இன்றைய எபிசோடில்  வெண்பா, பாரதி  பற்றிய  தன் அபிப்ராயத்தை  அனைவரின்  மத்தியிலும் சொல்கிறார்.

மெகா  சங்கமம்:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அகிலன், அஞ்சலி மற்றும் வேணு மட்டும் காஞ்சிபுரத்தில் ரெசார்ட்டில் தங்கலாம் என அங்கு செல்ல ராஜா ராணி குடும்பமும் அங்கு வந்துள்ளதை அடுத்து  இரண்டு  குடும்பமும்  ஒன்று சேர்ந்துள்ளது. ஆரம்பத்தில் அகிலனும், செந்திலும்  சந்திக்கும்  போது  முட்டிக்கொண்டாலும், பின்பு நல்ல நண்பர்களாகி விடுகின்றனர்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள்? விரைவில் அறிவிப்பு!!

அகிலனும், அஞ்சலியும்  ரொமான்ஸ்  சீனில்  மூழ்க, அடுத்ததாக செந்திலும், அர்ச்சனாவும்  தங்களது  ரொமான்ஸை ஸ்டார்ட் செய்து விட்டனர். மேலும் வில்லிகள் இருவரும் கூட்டு  சேர்ந்தும் விட்டனர்.  அங்கிருக்கும் அனைவர்க்கும் போர் அடிக்க அதற்கு வேணு புதிய பிளான் ஒன்றை சொல்கிறார். அதாவது அனைவரையும் அழைத்து எதாவது விளையாடலாம் என்று வட்டமாக  அமர வைக்கிறார்.

ஆளாளுக்கு ஒவ்வொரு விளையாட்டையும் சொல்கின்றனர். கடைசியாக அகிலன் ஐடியாவில் Truth or Dare கேம் விளையாடலாம் என்று முடிவெடுக்கின்றனர். அகிலன் பாட்டிலை நடுவில் வைத்து சுற்றி விடுகிறார். அது சரவணனுக்கு நேராக வந்து நிற்கிறது. அப்பொழுது சந்தியாவிடம் என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறீங்க என்பதை பேசி காட்ட வேண்டும் என்று சொல்ல சரவணனும் ஒத்துக்கொள்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ssc

வழக்கம் போல  சாப்டியா, என்ன  பண்றிங்க  என்று கேட்க அனைவரும்  கிண்டல் செய்கின்றனர். இதனால்  தன் மனதில் உள்ள காதல் அனைத்தையும்  சொல்கிறார். சந்தியா வந்த பிறகு தான்  வாழ்க்கைக்கே அர்த்தம் கிடைத்ததாக சொல்கிறார். இது அனைத்தையும்  வீடியோ  எடுத்து விடுகின்றனர். அடுத்ததாக சந்தியாவிடம் காதலை சொல்ல வேண்டும்  என்றும் கூறுகின்றனர்.

இதனால் சரவணன்  வெக்கப்பட்டு  உட்கார்ந்து விடுகிறார். அடுத்ததாக  அர்ச்சனா பக்கம் பாட்டில் திரும்ப செந்திலையும், அர்ச்சனாவையும்  நடனமாட  சொல்கின்றனர். அடுத்ததாக  வெண்பா  பக்கம்  திரும்ப  அது யாருக்குமே  பிடிக்கவில்லை. பாரதியை பற்றி கேட்க ஆரம்பிக்க  தனக்கு  பாரதியை எவ்வளவு  பிடிக்கும் என்பதை பற்றி சொல்கிறார்.

Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்!

ஸ்கூலில்  இருந்து காலேஜ்  வரை எப்பொழுதுமே அவர் பக்கத்தில் தான்  இருப்பேன் என்றும் கூறுகிறார். இப்பொழுது வரை நாங்கள் அப்படி  தான்  இருக்கிறோம். இது யாருக்கும் தெரியவில்லை என்றும் சொல்கிறார். பாரதி பற்றிய சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்கு தெரியும் என்று சொல்கிறார். இதனால் அனைவரும் கோவமடைகின்றனர்.

அடுத்ததாக அஞ்சலிக்கு வர அகிலன்  பற்றி  சொல்ல  சொல்கின்றனர். தன்  காதல் கதையை  பற்றி சொல்கிறார். இதுவரையிலும் தன் காதலை  சொல்லியதே  இல்லை என்றும் அதற்கு மன்னிப்பும்  கேட்கிறார். மேலும் ஒரு பாட்டோடு அஞ்சலியும் காதலை சொல்ல அடுத்த  ரொமான்ஸ்  ஜோடி  வந்தாச்சு  என்று ரசிகர்கள் குதூகலிக்கும் வகையிலும்  இருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!