பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பிப்ரவரி 25 கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
இந்தியாவில் கொரோனா தாக்க நிலைமை சற்று சீராகி வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி பாரத ஸ்டேட் வங்கி ஆகும். இது இந்திய அரசு வங்கி என அழைக்கப்படுகின்றன. இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இந்த வங்கியில் நடைபெறும். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் 48 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
பணியின் பெயர் : ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) என்னும் குரூப்பில் உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்) , உதவி மேலாளர் (ரூட்டிங் & ஸ்விட்சிங்) ஆகும்.
காலியாக உள்ள பணியிடங்கள் : 48 பணியிடங்கள்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு – அதிகபட்ச வயது வரம்பு 40
1.உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்)
விண்ணப்பதாரரின் தகுதி : இளங்கலை பட்டம் (முழு நேரம்) பெற்றிருக்க வேண்டும்.
2.உதவி மேலாளர் (ரூட்டிங் & ஸ்விட்சிங்) ((JMGS – I)
விண்ணப்பதாரரின் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பாடப் பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் (முழு நேரம்) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.02.2022
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: மார்ச் 20-ம் தேதி
மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.