தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
தமிழக வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் போராட்டம் நடத்த இருக்கின்றனர். அதனால் இன்று ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் விடுமுறை
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வாரத்தில் 5 நாட்கள் வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். நேற்று (ஜன. 26) குடியரசுதினம் என்பதால் அன்றும் வங்கிகள் விடுமுறை விடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டுமே வங்கிகள் இயங்கும்.
தமிழகத்தில் விமான நிலைய தரத்திற்கு உயர போகும் 9 ரயில் நிலையங்கள் – ரயில்வே பொது மேலாளர் விளக்கம்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் பொதுமக்கள் முக்கிய பண பரிவர்த்தனைகளை உடனே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.