வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள்
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!!

நாளை முதல் அடுத்து வரும் 6 நாட்களில் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால், விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

வங்கிகள் அடைப்பு

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனவரி மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள், பொது விடுமுறைகள் என குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இந்த மாதத்தில் மீதம் இருக்கும் 6 நாட்களில் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜனவரி 30 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா அணிவகுப்பு ரத்து – தெலுங்கானா அரசு அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

இதனால், பல்வேறு பகுதிகளில் வங்கி சேவைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், ஜனவரி 28 மற்றும் ஜனவரி 29 ஆகிய தேதிகளில் வார இறுதி விடுமுறைகள் வருகிறது. இதனை வைத்து பார்க்கையில், நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி சேவைகளை தடையில்லாமல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!