வங்கிகளில் டெபாசிட்களுக்கான வட்டி உயர்வு – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
நாட்டில் பண வீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை நிம்மதி அடைய செய்யும் வகையில் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றனர்.
வட்டி உயர்வு
இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது, வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும் போது அந்த தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் நடப்பு ஆண்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இருமுறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகள் தங்களின் கடன் சுமையை கட்டுப்படுத்த வாடிக்கையாளர்கள் மீது திணித்து வருகின்றனர். அதாவது பல்வேறு வங்கிகளில் கடன் தொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களை வருத்தம் அடைய செய்கிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை குஷிபடுத்தும் விதமாக பல்வேறு வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும் வட்டி விகிதத்தை 6% வரை உயர்த்தியுள்ளது.
வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 300+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!
அதன்படி இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2.90% முதல் 5.50% வரை வட்டி விகிதம் வரை உயர்த்தியுள்ளது. மேலும் இதில் மூத்த குடிமக்களுக்கு 6.30% வரை வட்டி விகிதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கிகள், தனியார் வங்கிகளில் HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளில் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.