பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது துவங்கி நடைபெற்று வரும் 2022, பிப்ரவரி மாதத்தில் வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி விடுமுறை

பொதுவாக ஒவ்வொரு மாதம் துவங்கும் போதும் அந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருந்தால் அதில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிப்ரவரி மாதத்தில் வெறும் 28 நாட்களே இருப்பதால், இதில் 10 நாட்களுக்கு மேல் வங்கிகள் அடைக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

TN Job “FB  Group” Join Now

இப்போது RBI வெளியிட்டுள்ள பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலின் படி, சுமார் 12 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது. இந்த விடுமுறைகளில், வார இறுதி விடுமுறை, சனிக்கிழமை விடுமுறை, மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறை ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்திலும் 4 ஞாயிற்று கிழமை விடுமுறை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

10 & 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!

அதனால் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும் காலங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை முன்னமே மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்றாலும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பிப்ரவரி 2ம் தேதியான நேற்று சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து,

  • பிப்ரவரி 5 – வசந்த பஞ்சமியை முன்னிட்டு அகர்தலா, புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • பிப்ரவரி 6 – ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 12 – இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 13 – ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 16 – குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு சண்டிகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • பிப்ரவரி 18 – டோல்ஜாத்ரா காரணமாக கொல்கத்தாவில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு விடுமுறை.
  • பிப்ரவரி 19 – சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகள் செயல்படாது.
  • பிப்ரவரி 20 – ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26 – நான்காவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 27 – ஞாயிற்றுக்கிழமை

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!