மே 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகள் மூடல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மே 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகள் மூடல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!v
மே 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகள் மூடல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மே 30, 31 ஆம் தேதிகளில் வங்கிகள் மூடல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மத்திய, மாநில அரசுகளும் அனைத்து சமூக நிதித்திட்டங்களையும் வங்கி மூலமே செயல்படுத்துவதால் கடும் பணிச்சுமை நிலவுகிறது. வங்கிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு பெறும் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட பணிக்கு புதிதாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதனால் வரும் மே 30 , 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வங்கிகள் மூடல்:

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வாரக் கணக்கில் கூட நடக்கும். இதனால் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கும். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் ஏற்கெனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டனர். கத்தோலிக் சிரியன் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஃபெடரல் பேங்க், யூசிஓ பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கிக் கிளைகளை மூடுதல், முக்கிய முடிவுகள் மூலம் ஊழியர்களைக் குறைத்தல், மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணி மாற்றம் செய்தல், வெளிப்பணி ஒப்படைப்பு போன்ற பிரச்சினைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் சிந்த் வங்கி ஊழியர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAVIN நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.8,051/- ஊக்கத்தொகை..!

இது குறித்து மகாராஷ்டிரா ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான தேவிதாஸ் துல்ஜாபுர்கார் கூறுவது , கடந்த 6 ஆண்டுகளாகவே வங்கிகள் இதுபோன்ற பணிகளுக்காக வெளியிலிருந்து ஆட்களை எடுத்துப் பயன்படுத்துவதாகவும், புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மகாராஷ்டிரா வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் சவான் கூறுவது, பெடரல் வங்கி ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து பேசினால் கூட அவர்கள் அடக்கப்படுகிறார்கள். வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளும் தாக்கப்படுகிறார்கள். வங்கித்துறையில் ஏராளமான காலியிடம் இருக்கிறது. ஆனால், நிரப்பாமல் காலம் தாழ்த்தப்படுவாதல், வேலைப்பளு இருக்கும் ஊழியர்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!