ஜன 30 & 31 தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம் – வாடிக்கையாளர்களை எச்சரித்த எஸ்பிஐ!
அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக அதன் கிளைகளில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என இந்தியாவின் மிகப் பெரிய பொதுக் கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
வங்கி விடுமுறை:
இந்தியாவின் மிகப் பெரிய பொது துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய வங்கி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வேலைநிறுத்தம் காரணமாக அதன் கிளைகளில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு – அரசின் முக்கிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
இருந்தாலும் இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு சில செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி இந்த இரண்டு நாள் கோரிக்கை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கிப் பணிகளை 5 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட வங்கி சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க UFBU முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.