நாடு முழுவதும் நவ.19 வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் – முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்!
நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை நிறுத்தம்:
வங்கி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். வங்கிகள் தனியார் மயமாக்கலை எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் பல காலமாக புகார் தெரிவித்து வந்தனர். இதற்காக பல முறை தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது கில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்திற்கு நவம்பர் 19ம் தேதி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் நவம்பர் 19ம் தேதி ஆகிய 3ம் சனிக்கிழமை வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தினால் மற்ற சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் வங்கி சம்மந்தப்பட்ட பணிகளை முன்னரே மக்கள் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.