தமிழகத்தில் விரைவில் பாங்க் ஆப் தமிழ்நாடு தொடங்கப்படும் – எம்.பி.அப்துல்லா தகவல்!
ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா அவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்கத்தில் ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற திட்டம் துவங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய திட்டம்:
தமிழகத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். இதற்கு முன்னதாக காலியாக இருந்த 2 இடங்களையும் சேர்த்து மொத்தம் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இதில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூரமாக அறிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் – மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு!
ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா, நேற்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார் தொடர்ந்து தி.மு.க., நிர்வாகி களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக, ஒரு தனித் துறையை உருவாக்குவோம், என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்துவதற்கான குரலாக இருக்கும்.
TN Job “FB Group” Join Now
வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்னைகளை, மத்திய அரசு மூலமாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழகத்தில், ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ துவங்கப்படும். அதற்கு முன், ‘பேமென்ட் பாங்க்’ விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும். இது ஒரு, ‘ஷெட்யூல்டு பாங்க்’. மற்ற வங்கிகளில் முதலீடு செய்யும் தமிழர்கள், ‘பேங்க் ஆப் தமிழ்நாடு’ வங்கியில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.