பேங்க் ஆப் மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS யில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள வங்களில் காலியாக உள்ள PO பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6932 காலிப்பணியிடங்கள் PO பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிக்கு என 500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக IBPS தெரிவித்துள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பேங்க் ஆப் மகாராஷ்டிரா |
பணியின் பெயர் | PO |
பணியிடங்கள் | 500 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பேங்க் ஆப் மகாராஷ்டிரா காலிப்பணியிடங்கள்:
IBPS மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து 6000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இருந்து மட்டும் PO பதவிக்கு 500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
IBPS CRP PO/MT-XII கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.
வயது வரம்பு:
01.08.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
PO தேர்வு செயல் முறை:
- Preliminary Examination
- Main Examination & Interview
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
CRP PO/MT-XII விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850 /-
விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே 22.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.