சைபர் கிரைம் மோசடியில் பறிபோகும் வங்கி பணம் – பொதுமக்களே உஷார்!
ஆன்லைன் வழியான மோசடிகள் பெருகி கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியெல்லாமா பணம் பறிபோகும் என ஆச்சரியப்படும் வகையில் சில நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் மோசடி:
ஆன்லைன் வழியான வர்த்தக சேவைகள் அதிகரிக்க அதிகரிக்க நூதன முறையிலான பண மோசடிகள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்படியெல்லாமா மோசடி நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டால் இனி வரும் காலங்களில் யாரையுமே நம்ப முடியாது போல் உள்ளது. அதாவது, உங்களது வீட்டு இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்பட்டுவிடும் நீங்கள் கடந்த மாத மின் கட்டணத்தை முறையாக அப்டேட் செய்யவில்லை. எனவே, உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் என சில குறிப்பிட்ட எண்களை தருகின்றனர்.
Exams Daily Mobile App Download
யாராக இருந்தாலும் இந்த குறுஞ்செய்தியை பார்த்தால் உண்மை போல தான் தோன்றும். உடனே, அவர்கள் தெரிவித்த எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசுவோம். அங்கு தான் தவறு நடக்கிறது. அவர்கள் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு கால் செய்த அடுத்த நிமிடமே உங்களுடைய வங்கி கணக்குகள் குறித்த அனைத்து விவரங்களும் ஹேக்கர்களிடம் மாட்டிக்கொள்கிறது. பின்பு, உங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடி விடுகின்றனர். எப்படி வேண்டுமென்றாலும் சூழ்ச்சி செய்து வங்கி பணத்தை கொள்ளையடிக்கலாம். மேலும், மின்வாரியம் ஒரு போதும் உங்களது எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவே மாட்டார்கள். எனவே எதுவாக இருந்தாலும் பொறுமையாக செயல்படும்படி காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படங்களை வாட்ஸ் ஆப் முகப்பு படமாக(DP) வைத்து மக்களை எளிமையாக முட்டாளாக்குகின்றனர். எனவே, ஆன்லைன் மூலமாக நடக்கும் மோசடிகளை கருத்தில் கொண்டு கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரியாத எண்ணில் இருந்து எந்த குறுஞ்செய்து வந்தாலும் அதை நம்பி எந்த ஒரு சூழ்ச்சி வேலைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளம் மற்றும் மின்னஞ்சல் என எதன் மூலமாக தேவையில்லாத செய்தி வந்தாலும் அதை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.