வங்கி கடன் தவணை (EMI) செலுத்த கால அவகாசம் – அரசுக்கு வேண்டுகோள்!!
தமிழகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடன் தவணை செலுத்த கால அவகாசம்:
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை ஊரடங்கை அமல்படுத்தும் படி அரசுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி மாநில முதல்வர் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினார். இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கினர். தினசரி வேலை பார்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடங்கள் ஒளிபரப்பு!
இந்த நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் தொழில்கள் இல்லாமல் கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலைவாய்ப்பு இன்றி வருமானம் இல்லாமல் மக்களிள் வாழ்வாதாரம் இழந்து வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகனக்கடன், நகைக்கடன் என பல விதமான கடனில் சிக்கித் தவிக்கிறார்கள்.
TN Job “FB Group” Join Now
இதனை கருத்தில் கொண்டு 6 மாத காலத்திற்கு கடன் பெற்றவர்களுக்கு தவணை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் அரசு பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவ வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும். மத்திய அரசிடம் கேட்டு கடன் தவணையை செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Avasiyam vendum
Avasiyam ventum