இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து வங்கிகள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
செப்டம்பர் 8ம் தேதியான இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை தினமாக இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. விடுமுறை தினங்களை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக வங்கி சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக முக்கிய 4 சேவைகளுக்கு மட்டும் நேரடியாக வங்கியை அணுக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை தினமாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக அறிவித்திருந்தது.
Airtel குறைந்த விலையில் நிறைந்த பலன்கள் – ரீசார்ஜ் திட்ட விபரங்கள் இதோ!
இந்நிலையில், செப்டம்பர் 8ம் தேதியான இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கி விடுமுறை தினமாக உள்ளது. நாடு முழுவதும் பொதுவாக கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது மட்டும் விடுமுறை தினங்கள் ஒரேநாளில் வரும். வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு விடுமுறை தினங்கள் வேறு வேறு நாட்களில் அறிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தின பட்டியலை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விடுமுறை பட்டியல்:
- செப்டம்பர் 8 – கௌஹாத்தியில் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 9 – ஹரித்தலிகா தீஜ் காரணமாக கேங்டாக்கில் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- செப்டம்பர் 10 – ஆமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை
- செப்டம்பர் 17 – கர்ம பூஜை (ராஞ்சி)
- செப்டம்பர் 19 – ஞாயிறு
- செப்டம்பர் 20 – இந்திராஜத்ரா (கேங்டாக்)
- செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயணா குரு சமாதி நாள் (கொச்சி, திருவனந்தபுரம்)
- செப்டம்பர் 25 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
- செப்டம்பர் 26 – ஞாயிறு